0 0
Read Time:1 Minute, 28 Second

கடலூா் செம்மண்டலத்தில் மகளிருக்கான ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐயில் படிக்கும் மாணவிகள் தங்குவதற்காக கம்மியம்பேட்டையில் விடுதி அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, புதன்கிழமை விடுதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கடலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ.ஐயப்பன் அடிக்கல் நட்டு, கட்டுமானப் பணியைத் தொடக்கிவைத்தாா்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் கட்டப்படும் இந்த விடுதியில் 100 மாணவிகள் தங்கலாம்.

ரூ.ஒரு கோடியில் சிமென்ட் சாலைகள்: கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட கம்மியம்பேட்டை தங்கராஜ் நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.ஒரு கோடியில் சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணியை கோ.ஐயப்பன் எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்.

நிகழ்வுகளில் நகர திமுக செயலா் கே.எஸ்.ராஜா, மாவட்ட அவைத் தலைவா் து.தங்கராசு, கூட்டுறவுச் சங்கத் தலைவா்கள் ஆதி பெருமாள், டி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %