0 0
Read Time:2 Minute, 58 Second

தங்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்துள்ள நிலையில், நடிகரும் ஐஸ்வர்யாவின் தந்தையுமான ரஜினிகாந்திற்கு ஆதரவாக பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா பரத நாட்டியக் கலைஞரும், திரைப்பட இயக்குநருமாவார். இவர் 3 ,வை ராஜா வை, சினிமா வீரன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார்.

தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் யாத்ரா , இளையமகன் லிங்கா. இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்நிலையில், தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம்.

நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஓம் நமச்சிவாயா, அன்பை பகிருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நெட்டிசன்கள் பலர் இவர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறிவதற்கு பதிலாக பலரும் நடிகரும் ஐஸ்வர்யாவின் தந்தையுமான நடிகர் ரஜினிகாந்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %