2 0
Read Time:1 Minute, 34 Second

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் திருக்கடையூர்- -கண்ணங்குடி- கிள்ளியூர் உள்ளிட்ட சாலைகள் 1/4 -3/4 நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த சாலை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி திட்டம் சாரா பணிகளின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் செம்பனார்கோவில் – நல்லாடை சாலை 8/8-11/0 மற்றும் தரங்கம்பாடி- மங்கைநல்லூர் -ஆடுதுறை சாலை 30/0-32/0 ஆகிய சாலைகளிலும் மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 2022 மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்கள் சிரமமின்றி வாகனங்கள் சென்று வர பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்ற தகவலை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %