0 0
Read Time:1 Minute, 59 Second

மயிலாடுதுறை அடுத்து அரங்கக்குடி – வடகரையில் அல் கரீம் அறக்கட்டளையின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் வாகனத்தின் சாவி வழங்கி துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் அரங்கக்குடி வடகரையில் அல்களின் அறக்கட்டளையின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எஸ் எம் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு அறக்கட்டளையின் வாகனத்தின் சாவியை வழங்கி சிறப்பித்தார். பின்னர் வாகனத்தை தானே இயக்கி வடகரையிலுள்ள அனைத்து தெருக்களிலும் ஓட்டி சென்று வலம்வந்தார். கிராம மக்கள் வாகனத்தை ஓட்டிய எம்எல்ஏவை பாராட்டி உற்சாகப்படுத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் மற்றும் கிராம மக்கள் பலர் உடனிருந்தனர். முடிவில் அல் கரீம் அறக்கட்டளையின் நிர்வாக மேலாளரும் மாவட்ட சிறுபான்மை அணி துணை செயலாளருமான ஹேப்பி-அர்சத் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %