மயிலாடுதுறை அருகே கிராம நெடுஞ்சாலையில் உள்ள கட்டிடம் மது அருந்தும் கூடமாக மாறுவதால் மக்கள் அவதி!

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதிவிளநகர் கிராம நெடுஞ்சாலையில் உள்ள வழித் துணை ஐயனார் கோயில் அருகே பயன்பாடற்ற குடிநீரேற்றும் மோட்டார் ஷெட், மற்றும் அருகே சிமெண்ட் தளமும் உள்ளதால் மது அருந்தும் கூட்டம் எந்நேரமும் அதைப் பயன்படுத்துகிறது. இதனால் சாலை வழிப் பயணிகள் முதல் கிராமவாசிகள், மாணவ மாணவிகள் வரை அச்சத்தோடு பயணம் செல்கிறார் கள்.பயனற்ற மோட்டார் ஷெட், நெடுஞ்சாலைக்கும்,கிராமவாசிகளுக்கும் இடையூறாக உள்ளதால், உபயோகமற்ற மோட்டார் ஷெட்டை உடனடியாக அப்புறப்படுத்துமாறு கிராமவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.