0 0
Read Time:2 Minute, 11 Second

மயிலாடுதுறை தாலுகா கீழப்பட்டமங்கலம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சந்திரமூர்த்தி(34). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் வேலைக்கு சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். அப்போது சுவர் அமைக்கும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள வீட்டில் 9-ஆம் வகுப்பு படித்துவரும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியும், கட்டாயப்படுத்தியும் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் அவர் இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் இருந்த சிறுமி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பரிசோதனையில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா மற்றும் மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து சந்திரமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சந்திரமூர்த்தி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாவட்ட செய்தியாளர் ராஜா -யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %