0 0
Read Time:1 Minute, 22 Second

மயிலாடுதுறை மாவட்டம், பழைய கூடலூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் 17வது ஆண்டு குருபூஜை அவரது மணி மண்டபத்தில் நடைபெற்றது.

குருபூஜையில் திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பழைய கூடலூர் கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குருபூஜைக்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை அருண்பிரியா மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.இரா.செல்வம், பழையகூடலூர் ஊராட்சி மன்றத் தலைவரும் குத்தாலம் ராஜ் வித்யாலயா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான இரா.பாண்டியன், ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறை அலுவலர் இரா.இராஜேந்திரன், ஸ்ரீகண்டபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் இரா.மதிவாணன், சுதா அண்ணாதுரை, டாக்டர் அருண்குமார் மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %