0 0
Read Time:1 Minute, 11 Second

ஒரே நாளில் 29 பேர் மனு தாக்கல்:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதையொட்டி, கடந்த 28-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. 36 வார்டுகளைக் கொண்ட மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மட்டும் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த 29 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய 5-வது நாளான நேற்று வரை 51 பேர் நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %