0 0
Read Time:1 Minute, 15 Second

கடலூர் அருகே ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டையை கடத்த முயன்ற நியாய விலை கடை ஊழியர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் பகுதியில் தமிழக அரசு நியாய விலை கடை ஒன்று இயங்கி வருகிறது. கடைக்கு வந்த அரிசி மற்றும் கோதுமையை கடத்த முயன்ற 8 பேரை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

கடையின் அத்தியாவசிய பொருட்களை இந்த நியாய விலை கடையில் இறக்காமல், அப்படியே லாரியில் கடத்த முயன்ற, நியாய விலை கடை விற்பனையாளர் ஐயப்பன் உள்ளிட்ட 8 பேரை சுற்றி வளைத்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.81 மூட்டை ரேஷன் அரிசி, 54 மூட்டை கோதுமை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %