0 0
Read Time:1 Minute, 36 Second

லால்பேட்டையில் வாலிபரின் வங்கி கணக்கில் விமான டிக்கெட் எடுத்து ரூ.1 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையை சேர்ந்தவர் ரயஸ் அகமது (வயது 30). இவரது செல்போனுக்கு சம்பவத்தன்று அடுத்தடுத்து குறுந்தகவல்கள் வந்தன. அந்த குறுஞ்செய்தியில் 5 விமான டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக ரயஸ் அகமதுவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 461 எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் மூலம் மர்மநபர் யாரோ, ரயஸ் அகமதுவின் வங்கி கணக்கை பயன்படுத்தி விமான டிக்கெட்டுகள் பதிவு செய்து ரூ.1½ லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %