0 0
Read Time:2 Minute, 24 Second

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட உள்ள இளம் வேட்பாளர் சைக்கிளில் வந்து நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுகின்றனர்.

அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக கூறைநாடு பகுதியில் இருந்து இரு சக்கர வாகனங்கள் புடைசூழ வேட்பாளர்களை சைக்கிளில் பேரணியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் அழைத்து வந்தனர். தொடர்ந்து நகராட்சி அலுவலகம் அருகே டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் நகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டில் மாவட்ட மாணவரணி தலைவர் பிரபாகரன் என்பவரின் தாயார் காமாட்சி என்பவரும், 26வது வார்டில் 21 வயது பொறியியல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியும், நகர துணைத் தலைவருமான முகமது ஆசிப் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வரை மயிலாடுதுறை சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகளில் 32 பேரும், குத்தாலம் ,மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய நான்கு பேரூராட்சிகளில் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யாத நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், சுயேட்சையாகவும் பலர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %