0 0
Read Time:1 Minute, 45 Second

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது அந்த நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி கடைசி நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மயிலாடுதுறை மாவட்டம் , தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் மொத்த 18 வார்டுகள் உள்ள இடத்தில் வியாழக்கிழமை 13 வேட்புமனுக்கள் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மீதமுள்ள 5 வார்டு உறுப்பினர்கள் தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூர் திமுக செயலாளர் வெற்றிவேல் தலைமையில் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மங்களேஸ்வரி, சவுந்தரவல்லி, பழனிவேல் ஆகியோரிடம் வேட்பாளர்கள் வழங்கினர்.

இதில் ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், பேரூராட்சி திமுக அவைத்தலைவர் கந்தசாமி மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் அரசு விதிமுறைகளின்படி சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %