0 0
Read Time:1 Minute, 20 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு பிப்ரவரி மாதத்தில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்தும்,வழங்கப்படும் அரிசியின் விழுக்காடு குறித்தும், இன்று தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு கிடாரம்கொண்டான் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு செய்தார்.

பிப்ரவரி மாதத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 70 சதவீதம் சன்ன அரிசியும் 30 சதவீதம் குண்டு அரிசியும் வழங்கப்படும் என்றும், தரமான அரிசியாக அது இருக்கும் என்றும் வட்ட வழங்கல் அலுவலர் தெரிவிக்கப்பட்டது. மேலும் கிடங்கு உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலரிடம் எதிர்வரும் காலங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %