0 0
Read Time:2 Minute, 30 Second

தமிழகத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வெற்றி வியூகம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் காணொலி காட்சி மூலம் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர்கள் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் காணொளி காட்சி மூலம் மாநிலங்கள் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை சிக்னேச்சர் திருமண மண்டப கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், முருகப்பா, ஞான இமய நாதன், நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராசு, மாவட்ட பொருளாளர் ஜி என் ரவி, குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சிவதாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி துணை அமைப்பாளர் சரபோஜி ராஜன் மற்றும் இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக முதல்வர் கூறிய அறிவுரைகளை கேட்டறிந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %