0 0
Read Time:1 Minute, 46 Second

சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவருடைய சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிணமாக கிடந்தார்

சேத்தியாத்தோப்பு அடுத்த அம்மன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57). இவர் அதேஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை சண்முகம் அவருடைய வீட்டின் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %