0 0
Read Time:1 Minute, 21 Second

நிலத்தகராறில் பெண்ணை அவரது உறவினர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி பாகூர் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி, இவரது உறவினர்களான செல்வி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் ஆதிலட்சுமி வீட்டின் அருகிலேயே வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே வீட்டுமனை தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில்,
ஆதிலட்சுமியின் மகள் வீட்டின் அருகே இருக்கும் இரு குடும்பத்திற்கும் சொந்தமான காலி மனையை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆதிலட்சுமி மற்றும் அவரது மகளை சுப்பிரமணி கட்டையால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %