0 0
Read Time:1 Minute, 47 Second

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஜெபி என்ற விசைப்படகில் பூத்துறை, இறையுமன் துறை பகுதியை சேர்ந்த 8 மீனவர்களும் அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 மீனவர்கள் என 10 மீனவர்கள் கடந்த மாதம் 29 ம் தேதி கொச்சியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடி தொழிலுக்கு சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது விசைபடகு பழுதானதால் இந்திய கடற்படையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த கடற்படையினர் மீனவர்கள் மற்றும் விசைப்படகை மீட்டு மகாராஷ்டிராவில் உள்ள ரெத்தினகிரி பகுதிக்கு அழைத்து சென்று விசைப்படகின் பழுதை சரிசெய்து திருப்பி அனுப்பியுள்ளனர். அப்போது, அனுமதியில்லாமல் வந்ததாக கூறி மகாராஷ்டிரா மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுடன் மீனவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், படகுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், மீன்களை ஏலம்விடப்போவதாகவும் தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு மீனவர்கள் வீடியோ மூலம் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %