0 0
Read Time:1 Minute, 14 Second

சிதம்பரம் அருகே மழையினால் வீடு இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவனும் பள்ளி மாணவியும் வெறும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி பூட்டோவின் வீட்டு சுற்றுச் சுவர் மழையின் காரணமாக முற்றிலும் சேதமாகி இருந்தது. வீட்டிற்குள் சீதாலட்சுமியின்19 வயது மகனும், உறவுக்கார சிறுமியும் இருந்த போது, திடீரென்று வீடு இடிந்து விழுந்தது. இதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து மழையால் வீட்டை இழந்து தவிக்கும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %