0 0
Read Time:1 Minute, 0 Second

மயிலாடுதுறையில் ஓட்டுக்கு பண பட்டுவாடா செய்ததாக இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மயிலாடுதுறை நகராட்சி, 10-வது வார்டுக்கு உட்பட்ட ஹாஜியார் தெருவில் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தேர்தல் அதிகாரிகளிடம், ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறி கூறைநாடு கிட்டப்பா தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இளைஞரிடம் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 20 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணம் பட்டுவாடா செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %