0 0
Read Time:1 Minute, 45 Second

தரங்கம்பாடி பேரூராட்சியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட 2, 17, 11,12, ஆகிய வார்டுகளில் உள்ள இச்சலஅடி, காவாலமேடு, ராஜவீதி ராணிவீதி, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் மற்றும் பனைமரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுந்தரமூர்த்தி, பொன்.ராஜேந்திரன் ஆகியோருக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் தேர்தல் பணிமனை திறந்து வைத்து வாக்குகள் கேட்டு வீடு வீடாக சென்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் வார்டு பொறுப்பாளர்கள் அமுர்த.விஜயகுமார், ஈச்சங்குடி -இளங்கோவன், கருணாநிதி, அன்சாரி, பாண்டு, உதயசங்கர், கழக முன்னோடிகள், திமுக மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %