0 0
Read Time:1 Minute, 32 Second

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் கடந்த நான்கு தினங்களாக செப்டிக் டேங்க்கில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மற்ற நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், புகாரின் பேரில் ஊழியர்கள் இன்று காலை செப்டிக் டேங்கினை சுத்தம் செய்துள்ளனர். அப்போது ஐந்து மாத சிசு ஒன்று இறந்த நிலையில்செப்டிக் டேங்க் குழாயில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிசு செப்டிக் டேங்கில் இருந்து எடுக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் ஊழியர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக பிரசவ வார்டில் யார் யார் சிகிச்சை பெற்று வந்தனர் என்றும் 5 மாத சிசுவை யார் வீசி சென்றார் எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %