0 0
Read Time:1 Minute, 32 Second

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் 7- வது வார்டு வேட்பளர் தோல்வியடைந்த விரக்தியில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கெலமங்கலம் பேரூராட்சி, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தேன்கனிகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

அப்போது கெலமங்லம் 7- வது வார்டில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தநிலையில், சுயச்சை வேட்பாளர் நாகராஜ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே வார்டை சேர்ந்த திமுக வேட்பாளர் ரமேஷ் என்பவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத திமுக வேட்பாளர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு நீண்ட நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, இச்சம்பவத்தால் வாக்கு எண்ணும் மையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %