0 0
Read Time:1 Minute, 36 Second

ஹிஜாப் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு எதிராக ட்வீட் செய்ததற்காக கன்னட நடிகர் சேத்தன் குமார் அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீதிபதிகளில் ஒருவரான கிருஷ்ணா தீட்சித்-கு எதிராக கன்னட நடிகரும் சமூக ஆர்வலருமான சேத்தன் குமார் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு பலாத்கார வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதியில் கிருஷ்ணா தீட்சித் அளித்து தீர்ப்பை விமர்சித்து அப்போது நடிகர் சேத்தன் குமார் வெளியிட்ட டுவிட்டர் பதிவை மேற்கோள்காட்டி அதே நீதிபதி தான் தற்போது ஹிஜாப் வழக்கையும் விசாரித்து வருவதாக ஆட்சேபனைக்குறிய வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து அம்மாநில போலீசார் நடிகர் சேத்தன் குமாரை கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %