0 0
Read Time:1 Minute, 34 Second

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் கடந்த 2 நாள்களாக நிலவும் பயோமெட்ரிக் இயந்திரக் கோளாறை சரி செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம் விளமல், ஆலத்தம்பாடி, கச்சனம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரம் இயங்காததால் பொதுமக்கள் பொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், ‘கடந்த 2 நாட்களாக அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக நியாயவிலைக் கடைக்கு வந்துவிட்டு திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. பயோமெட்ரிக் இயந்திரம் இயங்கவில்லை என்று கூறுகின்றனா். பிப்ரவரி மாதம் முடிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இதுவரை பொருட்கள் வாங்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். எனவே, இயந்திரப் பிரச்னையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %