0 0
Read Time:2 Minute, 15 Second

உக்ரைன் ரஷ்ய எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. உக்ரைன் எல்லைக்குள் ரஷ்ய படைகள் நுழைய தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷ்ய அதிபர் புடினின் ராணுவ நடவடிக்கையை உலகம் தடுக்க வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச அளவிலான எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் விவகாரத்தில் உதவுவதற்கு தயாராக உள்ளதாக தூதரகத்திற்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடிதம் எழுதிய நிலையில், அங்கு சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது.

044-28515288 / 6000 23645 / 99402 56444 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும், www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவிகள் கோரலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %