0 0
Read Time:1 Minute, 23 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 74வது பிறந்தநாளை முன்னிட்டு பு.முட்லூரில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும், அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களின் திரு உருவ படத்திற்கும் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கினார்.

நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக அம்மா பேரவை துணை செயலாளருமான பி.எஸ்.அருள், ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.திருமாறன், ஒன்றிய குழு தலைவர் ச.கருணாநிதி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரங்கம்மாள் சுதாகர்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %