0 0
Read Time:2 Minute, 22 Second

மயிலாடுதுறையில் வீடியோகிராபர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் பாலாஜி விசாரணை நடத்தி வருகிறார்.

மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணிய தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி சொர்ணலதா (வயது 23). இருவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. வீடியோ கிராபர் தொழில் செய்து வரும் ராஜேஷுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும் இதனால் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு அடிக்கடி சொர்ணலதாவிடம் சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் திருமணத்தின் போது வரதட்சணையாக சொர்ணலதா கொண்டுவந்த 25 பவுன் நகையையும் ராஜேஷ் அடமானம் வைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த சொர்ணலதா நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சொர்ணலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சொர்ணலதாவின் தந்தை, திருவாரூர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (49) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %