0 0
Read Time:1 Minute, 41 Second

சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா கஞ்சா விற்ற இரு வாலிபர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த அரை மணி நேரத்தில் வாலிபரின் செல்போனில் கஞ்சா கேட்டு 150-க்கும் மேற்பட்ட அழைப்புகள் கண்டறிந்து கஞ்சா விற்ற வாலிபரின் செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் மீது ஆய்வு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை பாயும் என கூறும் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர்.

குறிஞ்சிப்பாடியில் நீண்ட நாட்களாக கஞ்சா விற்ற வாலிபர்களை கண்காணித்து வந்த சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா அவர்கள் இன்று இன்ஸ்பெக்டர் செல்வம் அவரின் ஆலோசனையின்படி பெத்தநாயக்கன்குப்பம் ஆர்.சி தெருவை சேர்ந்த பாலு சரோஜா மகன் சரோன்( SARON) வயது அதே ஊரில் வள்ளலார் நகரைச் சேர்ந்த சிவகுரு மகன் கார்த்தி ஆகிய இரு வாலிபர்களையும் கஞ்சா விற்ற வழக்கில் இன்று கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரிடம் இருந்து அரை கிலோ அளவிற்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %