0 0
Read Time:1 Minute, 24 Second

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே லாரி – இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தாய், மகள் உட்பட 3 பேர் பலியாகினர்.

குமரன் நகரைச் சேர்ந்த ராஜாமணியின் இரண்டாவது மகள் கன்னி செல்வி கணவருடன் காரைக்குடியில் வசித்து வந்த நிலையில், இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் தாய் வீட்டிற்கு வந்த அவரை சமாதனப்படுத்தி மீண்டும் காரைக்குடிக்கு அனுப்ப முடிவு செய்து, கன்னிசெல்வி, அவரது தாயார் மற்றும் அக்காவின் கணவர் மணிகண்ட ராஜா ஆகியோர் பைக்கில் காரைக்குடிக்குச் சென்றுள்ளனர். கணவன் -மனைவி பிரச்சனை தீராததால், மூவரும் மீண்டும் ஊருக்கு திரும்பி உள்ளனர்.

அப்போது இவர்களது பைக் தூத்துக்குடி மாவட்டம் சோழபுரத்தில் வந்த போது, பின்னால் வந்த லாரி மோதியதில், தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மணிகண்ட ராஜாவும் உயிரிழந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %