0 0
Read Time:1 Minute, 30 Second

நெல்லிக்குப்பம், அருகே உள்ள நத்தப்பட்டு கன்னிமா கோவில் பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மனைவி வள்ளி (வயது 36). சம்பவத்தன்று மாலை இவர் வடலூர் அருகே மருவாயில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சில் வடலூருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து சிதம்பரத்துக்கு செல்லும் பஸ்சில் ஏறி மருவாய்க்கு சென்றர்.

மருவாய் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தனது கழுத்தில் கிடந்த 4½ பவுன் தாலி செயினை காணாததை கண்டு திடுக்கிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த பகுதியில் தேடிபார்த்தார். இருப்பினும் கிடைக்கவில்லை. பஸ்சில் பயணம் செய்த போது, யரேனும் பறித்து சென்று இருக்கலாம் என்று தெரியவந்தது.

இதுகுறித்து அவர் வடலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்து சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %