0 0
Read Time:2 Minute, 53 Second

திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் பாண்டுரங்கன் (வயது 50). விவசாயி. இவருக்கு வெங்கடேசன், ஜெகநாதன் என்று 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் வெங்கடேசன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஜெகநாதன் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

தற்போது அதர்நத்தத்தில் உள்ள வீட்டில், இவர்களுடைய தந்தை பாண்டுரங்கன், தாய் ஜெயலட்சுமி, ஜெகநாதன் மனைவி பிரியா ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏந்தலில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பிரியா சென்றுவிட்டார். இதற்கிடையே கடந்த 24-ந்தேதி ஜெயலட்சுமிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பாண்டுரங்கன் அழைத்து சென்றார். அப்போது வீட்டை பூட்டிய அவர், சாவியை வீட்டுக்கு வெளியே ஒரு இடத்தில் மறைத்து வைத்து சென்றுள்ளார்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் தனது மனைவியுடன் பாண்டுரங்கன் இருந்து வருகிறார். இதனால் நேற்று காலை தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து, தனது வீட்டுக்கு சென்று பார்த்து வருமாறு கூறியுள்ளார்.

அதன்பேரில் அவர் அங்கு சென்ற போது, வீட்டு கதவு திறந்த நிலையில் கிடந்தது. மேலும் உள்ளே இருந்த பீரோ திறந்த நிலையில், அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 3 பவுன் நகை திருடு போயிருந்தது.

இதன் மூலம் பாண்டுரங்கன் சாவியை மறைத்து வைத்திருந்த இடத்தை பற்றி அறிந்த மர்ம நபர், அந்த சாவியை பயன்படுத்தி வீட்டு கதவை திறந்து நகையை திருடி சென்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %