0 0
Read Time:1 Minute, 11 Second

மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்த திமுக அரசின் நடவடிக்கையை கண்டித்து என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் பாரதி ராதாகிருஷ்ணன் மா.சக்தி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %