0 0
Read Time:1 Minute, 38 Second

கும்பகோணத்தில் பஸ்சில் ஏற முயன்ற மாணவா், தவறி விழுந்து உயிரிழந்தான்.

கும்பகோணம் அருகே உள்ள அரிய திடல் கற்பக மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா. இவரது மகன் முகமதுஆதில் (வயது 16). கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்- 1 படித்து வந்த முகமதுஆதில் நேற்று காலை அரிய திடல் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பஸ்சில் ஏற முயன்ற போது முகமதுஆதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய முகமதுஆதிலை பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அதே பஸ்சில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனா்.

அங்கு மாணவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பட்டீஸ்வரம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவா் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %