0 0
Read Time:1 Minute, 39 Second

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவராக பூக்கடை கந்தன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 13 ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கந்தன் நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் தேர்தல் பார்வையாளர் செல்லப்பாண்டி தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேல்முருகன் கனகசபை முன்னிலையிஸ் தேர்தல் நடத்தும் அதிகாரி அருள்குமார் கந்தன் போட்டியின்றி ஒருமனதாக பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என அறிவித்தார்.

அவருக்கு முன்னாள் சட்டமன்ற கொரடாவும் ஆதிதிராவிட நல குழு மாநில இணைச்செயலாளருமான மருதூர் ராமலிங்கம், புவனகிரி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ துரை கி சரவணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வார்டு கவுன்சிலர்கள் கூட்டணி கட்சியினர் மற்றும் மாற்று கட்சியினர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். வெற்றி பெற்ற கந்தன் திமுக வின் நகர செயலாளர் என்பதும் குறிப்பிடதக்கது.

நிருபர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %