0 0
Read Time:1 Minute, 31 Second

பெண்ணாடம், அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபா் பிணம் கிடந்தது தொடா்பாக போலீசாா் விசாரைண நடத்தி வருகின்றனா்.

பெண்ணாடம்; அரியலுார் மாவட்டம், ஈச்சங்காடு ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்துக்கு அருகே 35 வயதுடைய ஆண் ஒருவர் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த விருத்தாசலம் இருப்பு பாதை ரெயில்வே போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவர் அந்த வழியாக சென்ற ரெயிலில் பயணம் செய்த போது, படிக்கட்டு வழியாக தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். இறந்தவர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட், சிவப்பு நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %