0 0
Read Time:1 Minute, 24 Second

அடிமைத்தனத்தை தகர்த்தெரியும் வலிமை மிக போர்க்குரல் பெண்கள் குரலே என முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் , திராவிட மாடல் அரசு மகளிருக்கென எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அரசு வேலைகளில் பெண்களுக்கு 40 சதவீதம் இடஒதுக்கீடு, கல்வி கட்டண சலுகைககள், நகர பேருந்துகளில் இலவச பயணம் என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதாகவும், இத்திட்டங்கள் தற்போது நாட்டிற்கே வழிகாட்டியாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சொற்களால் பெண்களை போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாத காலம் மாறி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %