0 0
Read Time:4 Minute, 13 Second

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி (கனகசபை) நடராஜரை வழிபடச் செல்லும் பக்தர்களை தடுக்கும் பொது தீட்சிதர்களை கண்டித்தும் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபட தமிழக முதல்வரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கை ஏந்தி தொடர் முழக்க போராட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.

சிற்றம்பல மேடையில் ஏறி நடராஜரை வழிபட செல்லும் பக்தர்களை தடுக்கும் பொது பொது தீட்சிதர்களை கண்டித்து சிதம்பரம் மேலவீதி ஸ்ரீ கோதண்டராமர் ஆலயம் அருகே நடந்த கை ஏந்தி தொடர் முழக்கப் போராட்டத்திற்கு கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என். ராதா தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினரும் கடலூர் மாவட்ட மூத்த துணைத் தலைவருமான
தில்லை ஆர்.மக்கின் வரவேற்றார்.

நகர காங்கிரஸ் தலைவர் பழனி(எ) பாலதண்டாயுதம் மாவட்ட துணைத்தலைவர்கள்
ரஜா. சம்பத்குமார் ஆர்.சம்மந்தமூர்த்தி ஜி. கே. குமார் நகர்மன்ற உறுப்பினர் மஞ்சுளா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ்கமிட்டி தலைவர்
என்.வி. செந்தில்நாதன் முன்னாள்மாவட்ட தலைவர் ஏ. ராதாகிருஷ்ணன் மாநில செயலாளர் ஜெயச்சந்திரன்
ஆகியோர் கலந்துகொண்டு பொது தீட்சிதர்களின் செயல்பாட்டை கண்டித்து பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவர்த்தாம்பட்டு விஸ்வநாதன் பி .வெங்கடேசன்
வட்டாரத் தலைவர்கள் செழியன் மாவட்ட துணைத்தலைவர் கீரபலையம் ராதாகிருஷ்ணன்
மாவட்ட பொருளாளர் தம்பா மூத்த தலைவர் வி.சண்முகசுந்தரம் கீரப்பாளையம் வெங்கடகிரி
மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆர்.வி சின்ராஜ் சிவசக்தி ராஜா ஜி.ஆறுமுகம் மாவட்ட செயலாளர்கள் நெல்சன் ஆட்டோ டி.குமார் சம்பந்தம் பேன்சி எ நடராஜன் ஒப்பிசி மாவட்ட அமைப்பாளர் குமரவேல்
கீரப்பாளையம் வெள்ளை நகர பொது செயலாளர் பி.ராஜரத்தினம் ஆளா (எ) தினேஷ்குமார்
மணலூர் ரவி முன்னால் வட்டாரத் தலைவர் பகவத்சிங் ரங்கநாதன் முன்னாள் நகர தலைவர் சி.பி. இரத்தினம் விவசாய அணி கருணாநிதி ஷர்மா பி நடராஜன் நாராயணசாமி காங்கிரஸ் ஆர்.டி.ஐ துறை மாவட்ட நிர்வாகிகள் பி.ஜெயச்சந்திரன் துணைத்தலைவர் எஸ். செந்தில் குமார் சிதம்பரம் நகர தலைவர் விக்னேஷ் ஆர்.டி.ஐ துறையை சார்ந்த சிதம்பரம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்அரவிந்த் சிதம்பரம் நகர துணை தலைவர் அசோக்குமார் சிதம்பரம் நகர பொது செயலாளர் மணி ரூபன்மாவட்டநிர்வாகிகள் ரஞ்சித் விக்னேஷ் பாலாஜி உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி.ஐ.துறை மாநில பொதுச் செயலாளரும் கடலூர் மாவட்ட தலைவருமான பி ஸ்டிபன்முத்துப்பாண்டி நன்றி கூறினார்

நிருபர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %