0 0
Read Time:1 Minute, 41 Second

கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜீவி (வயது 60). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வட்டிக்கடையில் கணக்கராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்ற ராஜீவி, அதன் பிறகு கடையில் இருந்து வெளியே வரவில்லை. இதற்கிடையே அங்கு பணிபுரியும் பிற ஊழியர்கள் கடைக்கு வந்த போது, ராஜீவி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து, பிணமாக கிடந்த ராஜீவி உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜீவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %