0 0
Read Time:58 Second

நாகை பறவைக்கார தெருவை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி வரலட்சுமி (வயது48). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகன் உள்ளார்.

சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த வரலட்சுமி வீட்டில் சமையலுக்கு வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %