0 0
Read Time:1 Minute, 47 Second

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சார்பில கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

உடுப்பி மாவட்டம், குந்தாப்புரா அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அந்த மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், இஸ்லாமிய அமைப்பினர் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக உயர்நீமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %