0 0
Read Time:5 Minute, 5 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில்; மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு உள்பட பல்வேறு பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகளான மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர், கிளியனூர் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, கிடாரம் கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி, தென்பாதி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், திருவெண்காடு, நாங்கூர், மணிக்கிராமம், திருநகரி, மேலையூர், பொறையாறு, தில்லையாடி, திருக்கடையூர், தரங்கம்பாடி, சங்கரன்பந்தல், சாத்தனூர், கிடாரம்கொண்டான், செம்பனார்கோவில், ஆக்கூர், பூம்புகார், திருவாலி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.

பொறையாறு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பொறையாறு, தரங்கம்பாடி, சந்திரபாடி, திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என்.சாவடி, கண்ணாப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, விசலூர், எடுத்துக்கட்டி சாத்தனூர், கண்ணங்குடி, கிள்ளியூர். டி.மணல்மேடு, மாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இதேபோல் கிடாரங்கொண்டான், மேமாத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே மேற்கண்ட துணை நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், மேலப்பாதி, கீழையூர், கருவாழக்கரை, காளகஸ்திநாதபுரம், திருச்சம்பள்ளி, ஆக்கூர், ஆக்கூர் முக்கூட்டுரோடு, அன்னப்பன்பேட்டை, மடப்புரம், மாமாகுடி, சின்னங்குடி, சின்னமேடு, பூந்தாழை, தலைச்சங்காடு, கருவி, செம்பதனிருப்பு மற்றும் அதனை சார்ந்த கிராமங்களுக்கும், மேமாத்தூர், கீழ்மாத்தூர், நல்லுச்சேரி, மேலகட்டளை, கடலி, நரசிங்கநத்தம், ஆறுபாதி, பரசலூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல்வகாப் மரைக்காயர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %