0 0
Read Time:1 Minute, 53 Second

விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் புது இளவரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவ கண்டன் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (27). தாய் சகுந்தலா (62). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு தங்களுடைய கூரை வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 12 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த பஞ்சவர்ணம், சகுந்தலா ஆகியோர் தீக்காயங்களுடன் எழுந்து வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். ஆனால் சிவ கண்டன் தீ விபத்தில் மாட்டிக் கொண்டார்.

திடீரென வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் விரைந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

அப்போது, வீட்டின் உள்ளே சிவ கண்டன் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். தீக்காயமடைந்த பஞ்சவர்ணம், சகுந்தலா ஆகிய இருவரும் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %