0 0
Read Time:1 Minute, 20 Second

வட சென்னையில் ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில் தீவிரம் காட்டும் விதமாக வடசென்னை இணை கமிஷனர் ரம்யா பாரதி சைக்கிளில் இரவு ரோந்துப்பணி சென்று அசத்தலில் ஈடுபட்டார்.

வடசென்னை இணை கமிஷனராக மிகவும் துடிப்பாக, துணிச்சலாக பணியாற்றுகிறார் ரம்யாபாரதி. வட சென்னையில் போதைப்பொருளை ஒழிப்பதிலும், ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதிலும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், இரவு நேரத்தில் வட சென்னையில் போலீசின் இரவு நேர ரோந்துக்களம் எப்படி இருக்கிறது, என்பதை நேரில் பார்வையிட விரும்பினார்.பொதுமக்கள் அசந்து தூங்கும் இரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான நேரத்தில் அதிக குற்றங்கள் நடக்கும் என்பதால் இணை கமிஷனர் ரம்யாபாரதி போலீஸ் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் அதிகாலை 2.45 மணிக்கு சைக்கிளில் ரோந்து பணியை தொடங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %