0 0
Read Time:1 Minute, 18 Second

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே காளாச்சேரி கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.

ஆப்போது நீடாமங்கலம் காளாச்சேரி கிராமத்தில் வாய்க்காலை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெற்பயிர்களை ஜேசிபி எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு பணிக்காக அப்பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கோர்ட்டு உத்தரவுபடி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது காளாச்சேரி பகுதியில் வாய்க்காலை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட பயிர்கள் அகற்றப்பட்டு உள்ளது. இதுபோன்று பூவனூர் , ராயபுரம் கிராமங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் தொடங்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %