0 0
Read Time:1 Minute, 28 Second

மயிலாடுதுறை, காமராஜர் சாலை விஸ்வநாதபுரம் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 50). சலவை தொழிலாளியான இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 22-ந்தேதி வீட்டிற்குள் சென்று கதவை பூட்டியவர் அதன்பின்னர் அவர் வெளியே வரவில்லை.

நேற்று முன்தினம் இரவு அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு மூவலூர் கிராமத்தில் வசிக்கும் அவருடைய மகள் சங்கீதா (27) என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சங்கீதா விரைந்து வந்து வீட்டை திறந்து பார்த்தார். அப்போது அங்கு சேட்டு தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா கதறி அழுதார். இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %