0 0
Read Time:1 Minute, 3 Second

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா எம்.புளியங்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 54) இவர் அரசு போக்குவரத்து விருதுநகர் கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவர் சம்பவத்தன்று இருசக்கவர வாகனம் ஒன்றில், சாமி கும்பிடுவதற்காக, புளியங்குளத்தில் இருந்து சித்தாலி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.

சிகிச்சைக்காக விருதுநகர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் இறந்தார். இதுகுறித்து வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %