0 0
Read Time:1 Minute, 50 Second

தஞ்சாவூர் மாவட்டம், குடவாசல் தாலுகா திருக்கண்ணமங்கை கொத்த தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் முத்துக்குமார் (வயது 29). கும்பகோணம் தாலுகா தேவனாஞ்சேரி உருடையான்நத்தம் கடைவீதியை சேர்ந்தவர் அசோக்குமார் (40). இவர்கள் 2 பேரும் கள்ளச்சாராய வியாபாரிகள் ஆவர்.

பாபநாசம் தாலுகா வடக்கு மாங்குடி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் குலாம் தஸ்தகீர் மகன் ஷாஜகான் (30). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து முத்துக்குமார், அசோக்குமார், ஷாஜகான் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயமோகன், சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர், முத்துக்குமார், அசோக்குமார், ஷாஜகான் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %