0 0
Read Time:1 Minute, 36 Second

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விவசாயிகள் விரோத கொள்கைகளைக் கண்டித்து என திங்கட்கிழமை குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு தொமுச மாநில துணை பொதுச் செயலாளர் வேல்முருகன் சிஐடியு மாநிலக்குழு கிருஷ்ணமூர்த்தி மாவட்ட இணைச்செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட தொமுச சிஐடியு வி.தொ.ச உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

தொமுச திட்ட இணைச் செயலாளர் கண்ணன் மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் ஜான் விக்டர் ஒன்றிய செயலாளர் வாசு விசிக நகரச் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பல பேர் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %