0 0
Read Time:5 Minute, 35 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ் பானு அப்துல்மாலிக், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனுசியா-அறிவழகன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்களாச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சம்சாத் ரபிக் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில், செம்பை ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி, கலைமகள் பள்ளி தாளாளர் குடிஅரசு, ஒன்றிய துணை தலைவர் மைனர் பாஸ்கர், திமுக பிரமுகர் எம்.ஆர்.ஜே.முத்துக்குமார், ஒன்றிய திமுக அவைத் தலைவர் மனோகரன், பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி, மருத்துவர்கள் சிவரஞ்சனி, அரவிந்தநாதன், செல்வம், ஜீவிதா, சித்தா மருத்துவர் நந்தினி, வட்டார சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், சீனிவாச பெருமாள், அருண், கிராம சுகாதார செவிலியர் விஜயலட்சுமி, குமுதா மற்றும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் செவிலியர்கள் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில்
வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கோபி தலைமையில் நடைபெற்ற முகாமில், குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மங்கை சங்கர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி எழிலன், காந்திமதி மற்றும் மருத்துவர்கள் மருத்துவ குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இம்மருத்துவமுகாமில் சிறப்பு மருத்துவ அலுவலர்கள் வருகைதந்து ஸ்கேன், இசிஜி, பொது மருத்துவம், மகளிர், குழந்தைகள், எலும்பு முறிவு, காது -மூக்கு -தொண்டை, கண் பிரிவு, பல் பிரிவு, இயன்முறை, சிகிச்சை பிரிவு, சித்தா, ஆயுர்வேதா, இனானி, யோகா, நியூட்ரிசன் மற்றும் ரத்த பரிசோதனை உட்பட வட்டார பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவம் மருத்துவ குழுவினரால் பார்க்கப்பட்டது. அங்கன்வாடி சார்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு தானியங்கள் விளக்க படங்கள் மற்றும் பொருட்காட்சி வைக்கப்பட்டிருந்தனர்.

நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும், முகாம்களில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து இலவசமாக மருந்து- மாத்திரைகள் பெற்றுக்கொண்டு முகாம்களில் கலந்து கொண்டவர்கள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களும் மருத்துவ முகாம்களில் கலந்து கொள்ள செய்யும்படி அறிவுறுத்தினார்.

முடிவில், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %