0 0
Read Time:1 Minute, 18 Second

சீர்காழியில் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் வேலழகன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட இணை செயலாளர் அன்பரசன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்ஊராட்சி ஒன்றிய ஆணையரை சாதி பெயரை சொல்லி திட்டியதை கண்டித்து பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயசித்ரா, இந்திராகாந்தி, புவனேஸ்வரி, சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %